டொமினிக் ஜீவா ( ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.இவரது நூல்கள்
சிறுகதைத் தொகுப்புக்கள்
* தண்ணீரும் கண்ணீரும் (சிறுகதைகள், 1960)
* பாதுகை (சிறுகதைகள், 1962)
* சாலையின் திருப்பம் (சிறுகதைகள், 1967)
* வாழ்வின் தரிசனங்கள் (சிறுகதைகள்)
* டொமினிக் ஜீவா சிறுகதைகள் (சிறுகதைகள்)
கட்டுரைத் தொகுப்புக்கள்
* அனுபவ முத்திரைகள்
* எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
* அச்சுத்தாளினூடாக ஒர் அனுபவ பயணம்
* நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
* முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்
மொழிபெயர்ப்பு நூல்
* UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு:கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)
ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்
* டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
* மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
* பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
* மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)
No comments:
Post a Comment