Monday, June 22, 2009

மலேசிய மொழிபெயர்ப்பு கவிதைகள்




















மௌனம்


மௌனத்தினூடே
போய் வருகிறேன் என்றாள்

நாங்களும் பிரிந்தோம்
அக்கணமே
ஒருவரையொருவர்
அறிந்து கொள்ளாமலே

(... மலாய் மொழியில் : NOOR S.M)

***********************************

ழுத்தில்லா புத்தகங்களை
வாசித்துக் கொண்டிருப்பது...

பக்கங்களில்லா புத்தகங்களை
புரட்டிக் கொண்டிருப்பது...

ஓவியங்களற்ற புத்தகங்களின்
காட்சிகளில் இலயிப்பது...

எழுத்து வானத்தில்
எழுதப்பட்டதாக
பக்கங்கள்...

மேகங்களுக்கிடையில்
புரண்டுக் கொண்டிருப்பதாக
ஓவியங்கள்...

கனவில் காணக்கிடைத்த
காதலியாக...
ரகசிய புத்தகம்
வாசிக்கப்படுகிறது

(... மலாய் மொழியில் : KEMELA) தமிழில் : பா.. சிவம்

No comments:

Post a Comment