Friday, June 19, 2009

ஓர் இந்தியக் கனவு...

க்கத்து தேசம் ஈழம்
துக்கத்தில் வாழும் கோலம்
மாற்றிடக் கை கொடுப்போம்
கொடுங்கூற்றினை வேரறுப்போம்

விழிகளில் வழியும் சோகம்
விரைவினில் தீர்ந்து போகும்
மனதினில் விழுந்த காயம்
பொழுதினில் மாயம் ஆகும்

தமிழ் தமிழ் என்று இனியும்
மொழிவெறி கொள்ளல் இல்லை
அமிழ்தினும் இனிய தமிழை
அகற்றிட யாரும் இல்லை

மானுடம் ஒன்றை மட்டும்
மனதினில் கொள்ளவேண்டும்
வாழ்விற்கு வலிமை சேர்க்கும்
வாழ்தலில் முறைமை வேண்டும்

மதவெறிக் கொள்கை மாற்றி
இதமுறக் கூடி வாழ்வோம்
இந்துவும் முஸ்லிமும் சேர்ந்து
சொந்தமாய் வாழ்தல் காண்போம்

இந்தியா நமது தேசம்
இந்தியம் கொள்கை ஆகும்
இந்துமாக் கடலில் அமைதி
இந்தியக் கனவு ஆகும்

உலகத்தின் பொது விதியை
இந்தியா உலகிற்களிக்கும்
தமிழ்க் கவி பாரதி கண்ட
கனவினைப் பரிசளிக்கும்!

குழந்தைக் கவிஞன்

No comments:

Post a Comment