இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF) சென்னை - திருவள்ளூர் மாவட்ட மாநாடு 27.06.2009 அன்று மாலை 5 மணியளவில் சென்னை அசோக் நகர் கோகுலம் பார்க் ஹோட்டலில் திரைப்பட இயக்குனரும் மாவட்ட துணைச் செயலாளருமான தோழர்.ரதன் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.என்.கமலாகரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. சென்னை மாவட்டச் செயலாளராக வழக்கறிஞர் க.இளங்கோவன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக பத்திரிகையாளர் க,குணசேகரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.மாநில செயலாளர் தோழர் முத்தியாலு, சி.கபிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டின் முடிவில் தோழர் எம்.பி.சங்கர் தலைமையில் 'இந்திய அயலுறவுக் கொள்கை ஒரு பார்வை' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், க.இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர்.
ராணா நன்றி கூறினார்.
சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகள்
கௌரவத் தலைவராக உ.கருணாகரன். மாவட்டத் தலைவராக கே.என்.கமலாகரன், மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் க.இளங்கோவன் ,துணைச் செயலாளராக தோழர்கள் ரதன் சந்திரசேகர், எம்.பி.சங்கர், மாவின், ஐ.உசேன், டாக்டர் குழைக்காதன், வழக்கறிஞர் கருணாகரன் , பொருளாளராக அனிதா காயத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய மாவட்ட நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக போஸ், மாவட்ட செயலாளராக பத்திரிகையாளர் க.குணசேகரன், துணைச் செயலாளர்களாக தோழர்கள் மதிவாணன், ஞானமூர்த்தி, மந்திரமூர்த்தி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய மாவட்ட நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

1 comment:
நேற்றய மதுரை மாநில மாநாடு மிகசிறப்பாக இருந்தது..
மு.அ.பாரதி
மாநிலத்தலைவர்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்.
Post a Comment