Thursday, June 25, 2009
இஸ்கப் சென்னை திருவள்ளூர் மாவட்ட மாநா டு
மேற்கூறப்பட்ட நிகழ்வு 27.06.2009 சனி மாலை 4 மணிக்கு சென்னை அசோக் நகர் கோகுலம் பார்க் ஹோட்டலின் ஐந்தாவது தளத்தில் தோழர் கல்யாணசுந்தரம்-பத்மநாபா அரங்கில் உ. கருணாகரன் தலைமையில் நடைபெறுகிறது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்குமாறு சென்னை மாவட்டச் செயலாளர் கே.என்.கமலாகரன் [குகன்] அழைப்பு விடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, 'இந்திய வெளியுறவுக் கொள்கை ஒரு பார்வை' என்ற தலைப்பில் மாலை 6 மணிக்கு நிகழும் பொதுக் கருத்தரங்கத்தில் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்,இஸ்கப் பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் க. இளங்கோவன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். அனைவரும் பங்கேற்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment