Friday, July 31, 2009

வன்னி அகதிகள் குறித்து ஐ.நா. செயலர் சர்வதேசத் தலைவர்களுடன் ஆலோசனை

....................................
Pictureலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களால் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் நிலை குறித்து சர்வதேசத் தலைவர்கள் சிலருடன் தாம் ஆலோசனை நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தாம் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளை விரைவாக அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

இது தொடர்பாக ஐ.நா. செயலர் வாஷிங்க்டனில் செய்தியாளரிடம் தெரிவித்தவை வருமாறு:

சமீபத்தில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டேன்.

இதன்போது இலங்கைக்கான எனது விஜயத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆராய்ந்தேன்.

நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அழுத்தமாக வலியுறுத்தினேன்.

முதலில் முகாமில் உள்ள மக்களின் நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். மனிதாபிமானப் பணியாளர்களின் நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.

முகாமில் உள்ள மக்களுக்கு மேலும் சுதந்திரம் அவசியம். அவர்களுடைய வாழ் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

தமிழர்கள் போன்ற சிறுபான்மை இனத்தவர்களை நோக்கி நேசக்கரங்களை நீட்டுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

சீனாவிற்கான விஜயத்தின் போதும் ஜி 8 உச்சி மாநாட்டின் போதும் இந்திய,சீனா தலைவர்கள் உட்பட முக்கியமான சர்வதேசத் தலைவர்களுடன் இந்த விஷயங்கள் குறித்து ஆராய்ந்தேன். தொடர்ந்தும் இது குறித்து ஆராய்வேன். என்றார்.

No comments:

Post a Comment