சுஃபி - பொதுவாக இது முஸ்லிம்களின் இசை. இன்றைக்கும் மசூதிகளில் திரு குரானை ஓதும் முறைகூட ஒருவகையில் சுஃபி இசையின் ஒரு வடிவம்தான் என்று பட்டிருக்கிறேன். சுபி இசை பெரும்பாலும் கவாலி (Qawwali) இசை என்றே அதிகம் அறியப்படுகிறது. சுபியின் மற்றுமொரு வடிவம்தான் கவாலி இசை.முதலில் மெல்லிய ஹார்மோனியமும் அதனை தொடர்ந்து மிருதுவான தபேலா அல்லது டோலக், பிறகு உச்சஸ்தாயில் ஆலாப், அதன்பின் தேவைப்பட்டால் கவிதை அல்லது பாடல். இதுதான் சுஃபி இசையின் வடிவம். பெரும்பாலும் ஹார்மோனியமும் தபேலாவுமே இதன் இசைக்கருவிகளாக செயல்படுகிறது.
இந்தியாவில் மொகலாயர்களின் வருகைக்கு பின்னர் இந்திய பாரம்பரிய இசையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்ப்பட்டு இன்றைக்கு இந்தியாவின் தொன்மையான இசையாக அறியப்பட்டு வரும் "ஹிந்துஸ்தானி" இசை கிடைத்தது. அனேகமாக, அது வரையில் இந்தியாவில் பயன்பாட்டிலிருந்த மெலடி என்று அறியப்படுகிற தனியிசை மருகி ஹார்மோனி அல்லது ஆர்கெஸ்ட்ரா என்று அறியப்படுகிற கூட்டிசையோடு இணைந்து "ஹிந்துஸ்தானி இசை"யாக உருமாறியது. இந்த "ஹிந்துஸ்தானி" இசையை பாடும் ஹிந்துக்கள் "பண்டிட்"என்றும் முஸ்லிம்கள் "உஸ்தாத்" என்றும் அழைக்கபடுவதாய் படித்திருக்கிறேன். இந்த கலவைக்கு முந்திய் இசைவடிவம்தான் சுஃபி.
முன்பெப்போதும் இல்லாத அளவில் தற்பொழுது, இந்தியாவில் பாகிஸ்தானி முஸ்லீம் இசைக்கலைஞர்களின் இசை பெரிதும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்க்கு "நுஸ்ரத் பதே அலி கான்", உஸ்தாத் சுல்தான் கான்" மற்றும் இளைய தலைமுறை இசைகலைஞரான "அதிப் அஸ்லாம்" என நிறைய உதாரணம் சொல்ல முடியும். இவர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு ஒற்றுமை, சுஃபி இசை. மற்றும் எந்த கலப்படமும் இல்லாமல், நல்ல இசையை கொடுத்ததால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது.ஆனால் சுஃபி, கசல், க்கவ்வாளி என பல இசை வடிவங்கள் துருக்கி மற்றும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதியானவையே. அதலால் இந்தியாவில் கிடைக்கும் இந்த இசைவடிவங்கள் சிற்ச்சில கலப்புக்களை கொண்டிருப்பது தவிர்க்க இயலாதது. இசைக்கு இன, மொழி, மத வேறுபாடுகள் கிடையாது.
ஆகவே சுஃபி இசை, இசையை விரும்பும் நம் எல்லோருக்கும் பொதுவானது.பொதுவாக மனிதனுக்கு இசையின் தேவை அவனது தனிமையை அகற்றுவதற்காக தேவைப்படலாம், மென்சோகத்தை வெளிப்படுத்த தேவைப்படலாம், அதீத பகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது இறைவனை அடைவதை இருக்கலாம். ஆக இசை, மனிதனுக்கு இந்த மூன்றையும் கொடுப்பதியிருக்க வேண்டியது அவசியம். சுஃபி இசையை பொறுத்தமட்டிலும், அதன் சிறப்பு என்னவென்றால் அது தனக்குள்ளேயே ஒரு தனிமையை கொண்டிருக்கும், மெல்லிய சோகம் ஒளிந்திருக்கும், ஒரு சாதுவின் மகிழ்ச்சியை பெற்றிருக்கும் இந்த மூன்றுமே சரிவர இணையபெற்றதுதான் சுஃபி இசை.
முரளிகுமார் பத்மநாபன்
eniyoruvithiseivom.blogspot.com
No comments:
Post a Comment