Friday, July 31, 2009

பலுச்சிஸ்தானில் இந்தியா தலையிட்டதற்கான ஆதாரம் எங்கே? அமெரிக்கா கேட்கிறது

லுச்சிஸ்தான் பிரச்சினையில் இந்தியா தலையிடுவதாக பாகிஸ்தான் தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் அதற்கான ஆதாரங்களை அந்த தலைவர்கள் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தானுக்கான அமெரிக்க தனித்தூதர் ஹால்புரூக் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இயற்கை வளம் கொழிக்கும் பகுதி பலுச்சிஸ்தான் ஆகும். பாகிஸ்தானின் பெட்ரோல் தேவை அந்த மாநிலத்தில் இருந்து கிடைக்கும் பெட்ரோல் மூலம் தான் நிறைவு பெறுகிறது. ஆனால் அந்த மாநிலத்தில் போதுமான அளவு முன்னேற்ற திட்டங்களை பாகிஸ்தான் அரசு செயல்படுத்தவில்லை. பஞ்சாப், சிந்து மாநிலங்கள் வளர்ச்சி பெற்ற அளவுக்கு பலுச்சிஸதான் வளரவில்லை. அந்த மாநில மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். இதனால் அந்த மாநில மக்கள் தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தை ஒடுக்கமுடியாத பாகிஸ்தான், இந்தியா மீது அபாண்டமாக பழி போட்டு உள்ளது. இந்தியா தான் தனி நாடுகோரும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தருவதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்த குற்றச்சாட்டை சமீபத்தில் எகிப்து நாட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த அந்த நாட்டு பிரதமர் கிலானி அவர் முன் வைத்தார். அதோடு பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய உள்துறை மந்திரி ரெகிமானும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார்.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டு பற்றி அமெரிக்கா கூறுகையில், `இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் தரவில்லை' என்று கூறிஉள்ளது. பாகிஸ்தானுக்கான அமெரிக்க தனித்தூதர் ஹால்புரூக் நிருபர்களிடம் கூறுகையில், `பலுச்சிஸ்தான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆதரவு தருவதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்களை அந்த நாட்டு அரசு கொடுக்கவில்லை' என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அது ஆதாரமே தரவில்லை என்று கூறினால் அது தவறானதாகி விடும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு கருத்துவேறுபாடு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment